வியட்நாம் நாட்டு மக்கள் பல வன விலங்குகளை தின்றே அழித்து ஒழித்து விடப் போகிறார்கள் என்று வியட்நாமில் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் வன விலங்குகளின் வியாபாரம் குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் இருக்கும் மலைவாசி மக்களிடமிருந்து வன விலங்குகளின் இறைச்சியை உண்ணும் பழக்கம் நகரங்களில் வசிக்கும் வசதிபடைத்தோர் மத்தியில் பரவிவிட்டதாக வியட்நாம் விலங்கியல் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
அருகிவரும் 80 வகையான உயிரினங்களின் இறைச்சி அங்கு மக்களால் உண்ணப்படுகிறது. காண்டாமிருகங்கள், டபிர் என்ற பன்றி போன்ற விலங்கு மற்றும் ஒரு வகை குரங்குகளும் இதில் அடங்கும்.