புலமைப் பரிசில் பரீட்சை 23ம் திகதி: நிவாரண கிராமங்களிலிருந்து 6000 மாணவர் தோற்றுவர்; பதிவு நடவடிக்கை ஆரம்பம்

examination_departmentsss.jpgநிவா ரணக் கிராமங்களிலுள்ள 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குரிய சுட்டிலக்கங்கள் வழங்குதல், பதிவு செய்தல் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து சுமார் 6000 மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கென நிவாரணக் கிராமங்களுக்குள்ளேயே சுமார் 48 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தவும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சில நிவாரணக் கிராமங்களிலிருந்து வேறு இடைத்தங்கல் முகாம்களுக்கு மக்களை இடமாற்றும் நட வடிக்கைகள் செய்யப்பட்டு வருவதால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை கண்டறியும் வேலைகளில் கல்வித் திணை க்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் மாண வர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவு னியா, மன்னார் என மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட ரீதியாகவே பரீட்சை நிலை யங்களை ஏற்படுத்துவதும், பதிவுகளை மேற் கொள்வதும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

இதேவேளை நிவா ரணக் கிராமங்களில் அல்லாத வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக சுமார் 2200 மாணவர்களும் தோற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *