ஐந்து வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

ஐந்து வெவ்வேறு ரக வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த சம்பவம் நேற்று கொஹுவலையில் இடம்பெற்றுள்ளது.

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுனு வீதியில் வைத்தே நேற்று மாலை 5.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்களும் இரண்டு லொறிகளும் வான் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டுள்ளன. இதில் 05 வாகனங்களும் சேதமாகியுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐவரும் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *