பேர்க்’ நிறுவனம் ரத்து செய்யப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

‘பேர்க்’ எனப்படும் பொது நிறுவன மறுசீராக்கல் ஆணைக்குழு ரத்துச் செய்யப் படவுள்ளது. இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆணைக்குழு ரத்துச் செய்யப்பட்டவுடன் இந்நிறுவனத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் நிதியமைச்சின் பொறுப்பில் இயங்கும் பொதுநிறுவன திணைக்களத்துக்கு மாற்றப்படும்.

பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டவுடன் இடம்பெறும் விவகாரங்களை கையாளவென பேர்க் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதென அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், மஹிந்த சிந்தனை கோட்பாட்டின் கீழ் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டா. எனவே ‘பேர்க்’ அமைப்பின் அவ சியம் அற்றுப்போய்விட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *