கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். விஸாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிபர் காணாமல் போய்விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருக்கும் போது அவரின் அடையாளத்துவம் வெளியிடப்பட்டிருக்கவில்லையென்றும் 3 மாத விஸா பெற்று வந்திருந்ததாகவும் ஆகஸ்ட் 9 உடன் அவரின் விஸாக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி.அபேயக்கோன் கூறியுள்ளார்.