யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் லொறிப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான பதிவுகளை யாழ்.வணிகர்கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இதுவரை லொறி உரிமையாளர்கள் தமது பதிவினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தில் செய்யாதிருந்தால் இன்று திங்கட்கிழமை அதற்கான பதிவை மேற்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டியுள்ளது.