ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்க்குமாறு கணினி நிலையங்களில் அறிவித்தல்கள்

இணையத்தளங்கள் மூலம் ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தும் நிலையங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது ஆபாசப்படங்களைப் பார்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த நிலையங்கள் மூடப்படும் எனவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இந்த நிலையங்களின் உரிமையாளர்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அரசு அண்மையில் ஆபாசப்படங்கள் தொடர்பான சில இணையத்தளங்களை தடை செய்துள்ளதையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  இதேவேளை, சில தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள், கணினி பயிற்சி நிலையங்கள், கணினி நிலையங்கள் என்பவற்றில் “ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் பொலிஸார் அறிவித்தல்’ என்ற விளம்பரங்களும் காணப்படுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *