மூதூர் 17 பணியாளர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

body1.jpgபிரெஞ்சு தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்று தேவை என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை நடுப்பகுதிவரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் எவரும் குற்றவாளியாகக் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது கவலைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வருடங்களாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச சமூகம் நம்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.”காட்சிப்படுத்துதல் முடிந்து விட்டது’ என்றும் தீவிரமான முறையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வும் கரிசனையுடைய அரசாங்கங்களும் கூறுவதற்கு இதுவே நேரம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டக் கொள்கை விடயங்களுக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரமான குற்றச்செயல் தொடர்பாக நீதி வழங்குவதற்கு தன்னால் முடிந்த சகலவற்றையும் செய்வதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பட்டினிக்கெதிரான செயற்பாட்டு அமைப்பின் பணியாளர் குடும்பங்கள் மேலும் உள ரீதியாக பாதிப்படைவதற்கான நடவடிக்கைகளுக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை ஏனையோர் மீது சுமத்த முயற்சிப்பதன் மூலம் இதனை மேற்கொள்வதாகவும் ரோஸ் கூறியுள்ளார்.

17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகின்றன. பொறுப்பானவர்கள் தொடர்பாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு நெருங்கிவரவில்லை

பதிலாக உள்ளூர் உரிமைகள் குழுக்களுக்கும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் பிரெஞ்சு அரசுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *