தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு7 ஆம் திகதி விடுமுறை

school-children.jpgநாட்டி லுள்ள அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

2009-08-07 ஆம் திகதி முதல் 2009-09-06 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை தினமாகும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது. மூன்றாந் தவணைக்காக 2009-09-07 ஆம் திகதி சகல தமிழ், சிங்கள பாடசாலைகளும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

பாடசாலை விடுமுறை தினங்களுக்குள் ஆகஸ்ட் 11 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. ஆகஸ்ட் 23 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *