வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் அடுத்த இரண்டு வருடத்துக்குள் மின்சார வசதிகளை வழங்குவதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே செனவிரத்தன தெரிவித்துள்ளார்.
வடபகுதிக்கு மின்சார வசதிகளை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வேலைத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா சுற்று வட்டத்திலுள்ள 35 கிராமங்களுக்கு அடுத்த சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைவுள்ளதுடன் அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கிடைத்துவிடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.