வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இவ்வாரத்திற்குள் இறக்க ஏற்பாடு – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

ship121212.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் வணங்கா மண் கப்பலின் ஊடாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இவ்வாரத்திற்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

பொருட்களை இறக்கி, அதனை விநியோகிப்பதற்கு கொழும்புத் துறைமுகம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இவ்வாரத்திற்குள் பொருட்களை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *