அரசுடன் இணைந்து மக்களுக்குப் பணிபுரிய வருமாறு – கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் முரளி அழைப்பு

தமிழ் மக்களுக்கு தேசிய அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள் ளுமாறு அழைப்புவிடுகின் றேன் என தேசிய நல்லி ணக்க ஒருமைப்பாட்டு அமை ச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறு மூலை சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி ஜனாதிபதி எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவேண்டும். அதற்கான அழைப்பை இம் மேடையில் வைத்து கிழக்கு மாகாண முலமைச்சருக்கு விடுக்கின்றேன்.

தமிழ் மக்களை தேசிய அரசியலில் இணைத்து இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களையும் மட்டக்களப்புக்கு அழைத்து வருகின்றோம். அமைச்சர்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

இம்மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக விளையாட்டு அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள விளையாட்டு வீரர்களை அபிவிருத்தி செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *