மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு

ranjith-gunasekara.jpgமீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த இரு ஆண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மீரிஹான பொலிஸார் இக்கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ள போதும், அது பற் றிய தகவல்கள் ஊர்ஜிதம் செய் யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *