வவுனியா நகரில் பஸ் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு – அமைச்சர் டளஸ் அழகப்பொரும தகவல்

dallus_allahapperuma.jpgவவுனியா நகரில் இரவு 7:30 மணியுடன் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் நாளை 31 ஆம் திகதி முதல் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நடத்தப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பொரும இன்று வவுனியாவில் தெரிவித்தார்.

இன்று காலை வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சும் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியா மக்களுக்கு சிறந்த போக்குவரதது சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரஜரட்ட ரயில் சேவை நாளை 31 ஆம் திகதி மீண்டும் வவுனியா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் நாளை அதிகாலை 3:15 மணிக்கு வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் இதற்கு முன்னர் வவுனியா வரை நடத்தப்பட நகரங்களுக்கிடையிலான  ஐந்து கடுகதி ரயில் சேவைகளும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டன. இப்போது அவை அநுராதபுரம் வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இச்சேவைகளும் வவுனியாவரை நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *