இந்தியா உட்பட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை இணங்கியுள்ளது. முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது. இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த ஜி15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பெரு, செனகல், வெனிசூலா, சிம்பாப்வே ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.