ரூ. 2200 மில். செலவு ஊவா வெல்லஸ்ஸ பல்கலை ஆக. 5 ஜனாதிபதியால் திறப்பு

university-of-sri.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கு 2200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஊவா மாகாணத்தின் கல்வி மற்றும் உயர் கல்வி மேம்பாட்டுக்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஊவா பிரதேச மக்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும் முதலாவது மாணவர் குழுவுக்கு இப்பொழுதே தொழில் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *