காலி, வெலிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளை ஞரொருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று (29) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.
வீட்டுக்குள் அதிகாலை புகுந்த ஆயுதக் குழுவொன்று குறித்த நபரை சுட்டும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இறந்தவரின் சடலம் காலி கராபிட்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடி க்கப்படவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.