இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜோசுவோ பொக்குடா நேற்று இரவு இலங்கை வந்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இவரை விமான நிலையத்தில் வரவேற்றார். சீகிரியாவில் இன்று இடம்பெறவுள்ள அரும்பொருட் காட்சியகத் திறப்பு விழாவிலும் பொக்குடா கலந்துகொள்ளவுள்ளார்.
இவர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது