வட பகுதியில் அரசாங்க, தனியார் உள்சார் கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்ப இந்தியா உதவியளிக்க முன்வந்திருப்பதுடன் பாரியளவிலான நிர்மாணப் பணிகளுக்கு பிந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.
பாரியளவில் புனர்வாழ்வு, மீள்கட்டுமான செயற்றிட்டத்தின் கீழ் கட்டிடங்கள், பொது வசதிகள் என்பவற்றை ஏற்படுத்துவதற்கான விடயங்கள் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல் நிர்மாண, பொறியியல் சேவைகள் அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது. அமைச்சின் நிர்மாணப் பிரிவில் ஐ.சி.ரீ.ஏ.டிக்கும் இந்தியாவின் நிர்மாண கைத்தொழில் துறை அபிவிருத்தி பேரவைக்கும் இடையில் கடந்த புதன்கிழமை ஒப்பந்தம் அமைச்சர் ராஜித சேனாரட்ண முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.