2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும் என்று கொழும்பு பல்கலைக்கழ கத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.
இச்சூரிய கிரகணம் யாழ்ப்பாண நகரிலும் வல்வெட்டித் துறையிலும் முழுமையாகத் தென்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி ஏற்படும் சூரிய கிரகணத்தை இலங்கையின் யாழ்ப்பாண நகரிலும், வல்வெட்டித்துறையிலும் சுமார் பத்து நிமிடங்கள் பார்க்க முடியும். ஏனைய பிரதேசங்களில் அதற்குக் குறைவான நிமிடங்களே பார்க்க கூடிய தாக இருக்கும். ஏனைய பிரதேசங்களில் அதுபகுதியாகவே தென்படும்.
இச்சூரிய கிரகணத்தை யாழ்ப்பாண நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் பார்க்க முடியும். முழுமையான சூரிய கிரகணத்தை இலங்கையர் நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு இதுவேயாகும். இச்சூரிய கிரகணம் மிகவும் ஒளிர்விட்டு மாணிக்கம் போல் பிரகாசிக்கக் கூடியதாக இருக்கும்.