நாற்பது வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் முதன் முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்ததாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இந்த மூன்று விண்வெளி வீரர்களும் புரிந்த சாகஸத்தை ஜனாதிபதி ஒபாமா பாராட்டியுள்ளார். ஆம்ஸ்டே;ராங் நிலவில் கால் பதிக்கும்போது தனக்கு 7 வயது எனக் குறிப்பிட்ட ஒபாமா, இந்த வரலாற்றுச் சாதனையாளர்கள் மூவரையும் ஒன்றாகச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரனில் மனிதன் கால்பதித்து 40 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலவுக்கும் பின்னர் செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் நாஸாவின் முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் இணங்க வேண்டுமென அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்துறை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.