கிழக்கில் வீதிகள் வெறிச்சோட்டம்

sun.jpg‘சூரிய கிரகணம்’ அச்சம் காரணமாக அம்பாறை மாவ ட்டத்திலுள்ள முக்கிய வீதிகளும், பிரதேசங்களும் நேற்று புதன்கிழமை மு.ப. 8.00 மணிவரை வெறிச் சோடிக் காணப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் வரவு குறைவ டைந்திருந்ததாகவும், அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகை கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் அதிபர்களும், அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அதிகமான பாடசாலைகள் மு.ப. 8.00 மணிக்குப் பின்னரே ஆரம்பமாகின. இருந்த போதிலும் அச்சம் காரணமாக அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பி வைக்கவில்லை. அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் நேரம் பிந்தி சமுகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அதிகாலை தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குப் புறப்படாது வீட்டில் முடங்கியிருந்தனர். வர்த்தக நிலையங்களும், வழமையான நேரத்தை விடவும் பிந்தியே திறக்கப்பட்டன.

கடற்கரையை அண்டி வாழும் மக்கள் அச்சம் காரணமாக ஏற்கனவே இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டப் பள்ளிவாசல் களில் சூரிய கிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன் பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *