வடக்கில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

petrol.jpgவட மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்;கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.பீ.கணேகல தெரிவித்தார்.

புதிய மாற்றத்துக்கு ஏற்ப ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 6ரூபா 50 சதத்தாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபா 10 சதத்தாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபா 60 சதத்தாலும் குறைவடைகிறது.

புதிய விலைக்கு ஏற்ப  ஒரு லீற்றர் பெற்றோல் 134 ரூபாவுக்கும் டீசல் ஒரு லீற்றர் 76 ரூபா 50 சதத்துக்கும் மண்ணெண்ணெய் 54 ரூபாவுக்கும் இன்று நலள்ளிரவு முதல் வட மாகாணத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *