காங்கேசன்துறையிலிந்து பளைவரையான ரயில் பாதைப்புனரமைப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சீன பொறியியலாளர் குழுவொன்று நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்
இதேவேளை, அம்பாந்தோட்டையிலிருந்து கட்டடக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு யாழ் புகையிரத நிலையம் முன்பிருந்தது போலவே புனரமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த புனரமைப்புப் பணிகளுக்கு அம்பாந்தோட்டை மக்களும் கனிசமான பங்களிப்பு வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்தேவி ரயில் சேவையை முன்னரைப்போலவே மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் காங்கேசன்துறையில் இருந்தும் வவுனியாவில் இருந்தும் ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.