கடவுச்சீட்டில் மோசடி செய்து சிங்கப்பூர் ஊடாக ஜேர்மனி மற்றும் இத்தாலிக்குச் செல்ல முயன்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இரு இளம் பெண்களையும் தலா 20 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடீ அல்விஸ் அனுமதித்தார். கொட்டாஞ்சேனை மற்றும் கலேவெலயைச் சேர்ந்த யுவதிகளே குற்றஞ்சாட்டப்பட்டவர்களாவர்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.