யாழ். டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

யாழ். பஸ் டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை தமது தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,

வட பகுதி போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் யாழ். பஸ் டிப்போ இன்றும் இரு தினங்களில் முன்மாதிரி டிப்போவாக தரம் உயர்த்தப்படும். அதனை முன்னி;ட்டே 50 பஸ் வண்டிகளும் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் யாழ் – கொழும்பு, யாழ் – கண்டி, யாழ் -புத்தளம், மற்றும் யாழ் – அநுராதபுரம் புதிய பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். மேலும் ஏ 9 வீதியினூடாக இலங்கை போக்குவரத்து சபை பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *