புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தேடுதலின்போது 25,000 லீடர் பெற்றோல் மற்றும் 9 பெரல்கள் அடங்கிய இன்ஜின் ஒயில் என்பன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
படையினருக்குக் கிடைத்துவரும் இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவினர் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த எரிபொருட்கள் கடற்புலிகளின் தேவைகளுக்காக ஆனந்தபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் தொடர்ந்து நடைபெறுவதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்