மறைந்த பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன் குழந்தைகள் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாக்ஸனுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்; நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜாக்ஸனின் இரண்டு குழந்தைகளுக்கு தாமே தந்தை என அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக தோல் நோய் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஆர்னால்ட் கெலின் கூறியுள்ளார்.
ஜாக்சனின் மூன்று குழந்தைகளில், மூத்த இரண்டு குழந்தைகளான பிரின்ஸ் மைக்கல் (வயது 12) மற்றும் பாரிஸ் (வயது 11) ஆகியோருக்கு நானே உண்மையான தந்தை. அதனால், அவர்களை என் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமது வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரின்ஸ், பாரிஸ் இருவரும் ஜாக்ஸனின் மனைவியான டெப்பி மூலம் தமக்குப் பிறந்தவர்கள். எனவும் கூறியுள்ளார். அவர்கள், என் குழந்தைகள் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜாக்ஸனின் இரண்டாவது மனைவியான டெப்பி ரோவே, 1996ம் ஆண்டில் டாக்டர் ஆர்னோல்ட் கெலினிடம்; தொழில் புரிந்துள்ளார். அப்போது தான் ஜாக்ஸன் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.