வவுனியா நகர சபை தேர்தல் பிரசாரத்தில் டக்ளஸ் மும்முரம் – பொதுமக்களுடனான சந்திப்பிலும் பங்குபற்றினார்

வவுனியா நகர சபைத் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சரின் கட்சியான ஈ.பி.டி.பி தமது வேட்பாளர்கள் ஆறு பேரை நிறுத்தியுள்ளது.

தமது கட்சி வேட்பாளர்களுக்காக அமைச்சர் நேற்று முன்தினம் மாலை சகாயமாதாபுரத்திற்கு விஜயம் செய்து பொதுமக்களுடனான சந்திப்பில் பங்குபற்றினார்.

எங்களுக்கு தேவை உரிமை. அதற்காகவே நாம் அரசுடன் உறவை வைத்துள்ளோம். அவலப்படும் மக்களை கைதூக்கி விடுவதற்காகவே அரசுடன் கைகுலுக்குகின்றோம் என அமைச்சர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.

வரட்சி காலத்தில் தாம்குடிநீர் பெற்றுக்கொள்ளமுடியாமை குறித்து சகாயமாதாபுரம் மக்கள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தபோது நீண்டகாலமாக உள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வவுனியா மாவட்ட அமைப்பாளர் சிவன்சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் நேற்றுக் காலை நகர கலாசார மண்டபத்தில் வவுனியா வர்த்தக பிரமுகர்களை அமைச்சர் சந்தித்தித்தார்.

வவுனியா நகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதியை அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவே ஆளும் கட்சி சபையினை கைப்பற்றினால் கூடுதல் நிதியை பெற்று நகர அபிவிருத்தியையும் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *