இரட்டைக் குழந்தைகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மரணம்

சிலாபம், அக்கரையான் தொட்டுவ பகுதியைச் சேர்ந்த 1 1/2 வயதுடைய இரட்டைக் குழந்தைகள் திடீரென ஏற்பட்ட வாந்தி காரணமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சிலாபம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றுள்ளது. இக்குழந்தைகளுக்கு திடீரென வீட்டில் வாந்தி ஏற்பட்டதால் பெற்றோர் இருவரையும் சிலாபம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும்போது காலை 10 மணிக்கு ஒரு குழந்தையும் பிற்பகல் ஒரு மணிக்கு மற்றக் குழந்தையும் மரணமடைந்தன.

இவர்களின் மரணத்திற்குரிய காரணத்தை தம்மால் அறிய முடியாதிருப்பதால் கொழும்புக்கு சடலங்களை அனுப்பி அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *