பயங்கர வாதத்திலிருந்து நாடு விடுதலை பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் தமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் உரிமை தற்போது கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஊவா மாகாணத்தில் துரித அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Kusumbo
எதிர்காலமா? யாருக்கு? பயங்கரவாதம் பற்றிக் கதைக்கிறீர்களே! நீங்கள் யார்? பயங்கரவாதிகளைப் பயங்கரவாதிகள் நீங்கள் கொன்றிருக்கிறீர்கள். சுதந்திரம் பற்றி நீங்கள் எப்படிக் கதைக்க முடியும்.
msri
அதுதான் உங்களின் ஆதரவுகள் சந்திக்க ஆரமபித்துள்ளார்கள!
பிரபாகரப் பயங்கரவாதமற்ற> மகிந்தப் பயங்கரவாதத்தை எப்படி நாட்டில் தக்கவைக்கலாம் என உங்களின் சி.ஐ.ஏ.க்கள் யேர்மனியில் ஆராய்ந்துகொணடு இருக்கின்றார்கள்!