சவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வந்த 54 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். தாங்கள் பணிபுரிந்த இடங்களில் போதிய சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், கஷ்டமான வேலைகளை தங்களுக்கு வேலைத் தளங்களில் செய்யுமாறு வற்புறுத்தியதுமே நாடு திரும்பியதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.