மட்டக் களப்பு பகுதியில் புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி ராசா உதயங்க தெரிவித்தார்.
மாமங்கம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்றும் மற்றவர் கடற்புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து 10 கிலோ எடையுடைய பாரிய அமுக்க வெடி ஒன்றுடன் ஹையேஸ் ரக வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் அதிபர் எடிச குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரியல்ல தலைமையிலான உயர்மட்ட பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.