மட்டக்களப்பின் மாமாங்கம் மற்றும் சித்தாண்டி பிரதேசங்களிலிருந்து அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி குண்டுகள் கிளேமோர் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்ப டையில் 10 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி ஒன்றை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மாமாங்கம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றை சோதனையிட்டபோதே இந்த அமுக்க வெடி குண்டை மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, வாழைச்சேனை, சித்தாண்டி பிரதேசத் தில் சுமார் 23 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட ஆயுதங்களை மீட்டெடுத் துள்ளனர். 20 கிலோ எடையுள்ள கிளேமோர், 2 கிலோ எடையுள்ள கிளேமோர், ஒரு கிலோ எடையுள்ள கிளேமோர், வயர் ரோல் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.
மேலும் கிண்ணியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மூதூர் பிரதேசத்தில் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கிலோ எடையுள்ள வெடிமருந்து, ரி-56 ரக துப்பாக்கிகள் -02, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 29, வெடிக்க வைக்கும் கருவி -01, ரி-56 ரக துப்பாக்கி பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.