கொழும்பு கட்டுநாயக்க அதிவேப் பாதை அமைப்புப் பணிகளுக்கு சீன உதவி

18rohitha_bogollagama_.jpgஇடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு கட்டுநாயக்க அதிவேப் பாதை அமைப்புப் பணிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டபின்னர் நேற்று நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளரிடம் இதனைத் தெரிவித்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார். இலங்கையில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா ஒரு பில்லியன் டொலர்களை ஏற்கவே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை, சீனாவின் சின்சுவான் பிரதேசத்தில் இலங்கையின் உதவித் தூதுவர் காரியாலயம் ஒன்றைத் திறப்பது தொடர்பாக சீனாவின் கம்யனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் அமைச்சர் பேச்சசுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *