காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்

kattankudy_arms.gifஅரசாங் கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று பெருந்தொகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை ஆயுதங்களைக் கையளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேற்படி பள்ளிவாசலில் நடந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர் எடி சன் குணதிலக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பால, ஆரையம்பதி பொலிஸ் பொறுப்பதிகாரி கப்டன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு; ரீ-56 ரக துப்பாக்கி -17, எஸ்.எம்.ஜீ. 01, சொட்கன்-01, 03 ரக துப்பாக்கி-04, ஜே.ஆர். ரக கைக்குண்டு-03, எஸ்.எம்.ஜீ. கைக்குண்டு-10, 38 ரக குண்டு-01, ரீ-56 ரக ரவைகள்-1076, ரீ-56 ரக மகkன்-25, ல்கட்டாஸ்-01, 9 எம்.எம்.பிஸ்டல்-01, 9எம்.எம்.மகkன்-07

மேற்படி ஆயுத ஒப்படைப்பின் பின்னர் கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக உரையாற்றினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *