திருகோ ணமலையில் சித்த வைத்திய போதனா வைத்தியசாலை ஒன்றை அமைக்க சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் செல்முறைப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் பிரதேச மக்களின் தேகாரோக்கியத்தை கருத்தில் கொண்டும் இந்த சித்த வைத்திய போதனா வைத்தியசாலை அமைக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நாளை 6 ஆம் திகதி திறந்து வைப்பார் என சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது