இலங்கை யிலுள்ள மலை உச்சிகளில் காடுகளை வளர்க்கும் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரமான மலைப் பிரதேசங்களில் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டுவரப்படும். இதில் காடு வளர்க்கும் திட்டத்துக்கான நிதியை திறைசேரியிலிருந்தோ அல்லது வெளிநாட்டு உதவியாகவோ பெற்றுக்கொள்ளப்படும்.