“வட இலங்கை முகாம் அகதிகளை மீளக் குடியேற்ற கால அட்டவணை வேண்டும்”

rg-camp.jpgஇலங்கை யின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

தம்மை சுற்றவரவுள்ள முட்கம்பி வேலிகளை விட்டு வெளியே வர தமிழ் மக்கள் மிகவும் ஏக்கத்துடன் இருப்பதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான ஒரு கால எல்லையை அறிவிப்பது, காலவரையற்று அங்கே முகாம்களில் தடுத்து வைக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்களது மனதில் இருந்து அகற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் இந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முன்னர் உறுதி கூறப்பட்டதற்கு இணங்க, இவ்வருட இறுதிக்குள் முகாம்களில் இருந்து வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *