‘சற் ஸ்கோர்’ புள்ளி இன்று வியாழக்கிழமை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் மேற்படி அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் ‘சற் ஸ்கோர்’ புள்ளி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது