வடபகுதியில் சேத விபரங்களை மதிப்பீடு – பணி ஆரம்பம்!

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் வடபகுதியில் மோதல்களால் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை மதிப்பீடுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒருகட்டமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் புதன்கிழமை தமது குழுவினருடன் இந்த மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராந்துள்ளனர்.

அரசாங்க அதிபர்களுடன் இந்த மாவட்டங்களுக்குச் சென்ற குழுவினர்,  அங்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டிருக்கும் சேத விபரங்கள் குறித்து தகவல்களை திரட்டும் பணியை ஆரம்பித்தனர். இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களைக்கொண்டு மீள்குடியேற்றத்திற்கான கூறுகளை ஆராயவிருப்பதாக மீள் குடியேற்ற அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *