எரிபொ ருட்களின் விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெற்றோல் (90 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்தே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளிலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையதிகரிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.