மலையகத்தில் நேற்றும் 24 மணி நேர எச்சரிக்கை

images.jpgமலையத் திலுள்ள நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களினதும் வெவ்வேறு பிரதேசங்களில் இந்த அபாயம் உருவாகி இருப்பதாக நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் 100 மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யு மென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.

அதனால் இம்மாவட்டங்களில் மணிசரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. அதனால் மண்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியாகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்ட த்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோப்பிட்டிய, தெரணியா கல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும், நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன. அவை ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *