மின்சாரப் பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து மின்சாரப் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விசேட திட்டம் ஒன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்தார். நாட்டில் மின்சாரப் பாவனையாளர்களாக உள்ள சுமார் 4.5 மில்லியன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஒன்று இல்லாததால் மக்கள் பெரும் அவலநிலைக்கு ஆளாவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.
புதிதாக மின் இணைப்புப் பெறுவதில் தாமதம் ஏற்படல், ஆபத்தான மின் விநியோக கம்பிகளை அகற்றுதல், மின்கட்டணத்தை முறையாக பதிவு செய்யாமை, பராமரிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமை, போன்ற பலதரப்பட்ட நெருக்கடிகளை பாவனையாளர்கள் எதிர்நோக்குகின்றனர். இதன் பின்னர் இவ்வாறான குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவிக்கின்றது.