கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மெளலவி ஹஸன் அஸ்ஹரி தனது மாகாண சபை உறுப்பினர்களுக்கான இரண்டு மாதச் சம்பளத்தை வன்னியில் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும், அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
23-06-2009 செவ்வாய்க்கிழமையன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளலவி ஹஸன் அஸ்ஹரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளவி ஹஸன் இம் மாதச் சம்பளத்தை வன்னியில் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதுடன் அடுத்த ஜுலை மாதச் சம்பளத்தை அங்கவீனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கும் வழங்கவுள்ளோம்.ஈரான் நாட்டின் உதவியுடன் மூதூர் கிராமத்தில் 150 வீடுகளைக் கட்டி கொடுக்கவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.