கொழும் பின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகக் குழாய்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இன்று காலை 8 மணி முதல் இந்த நீர் வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி, பேலியகொட, ஹெந்தல, வத்தளை, மகர மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலிலேயே இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படும். எனவே முன்கூட்டியே நீரைச் சேமித்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.