13 மாவட்டங்களில் தீவிரம்; 146 பலி; 11,589 பாதிப்பு

dengu_1.gifநாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப ட்டு வருவதுடன் புதிதாக டெஙகு உற்பத்தியாகும் இடங்கள் இனங்காணப்பட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 11,589 பேர் பாதி க்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய 13 மாவட்டங்களின் கீழுள்ள 68 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சிச் சபைகளின் பங்களிப்புடன் பிரதேசங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு உற்பத்தி இடங்களை இனங்கண்டு அழித்து வருகின்றன. இதற்கென அப்பகுதிகளின் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டு இந்நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புத் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல மட்டங்களிலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *