வடக்கில் இடம்பெயர்ந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களினதும் நலன்புரி நிலையங்களிலுள்ளோரினதும் நலன்களை கவனிக்கவென ஊழியர் நம்பிக்கை நிதிய சபை 100 இலட்சம் ரூபாவினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கே. எம். ஏ. கொடவத்த இந்நிதியை நேற்று (23) அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மாத்திரம் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 102 கிளைகளில் 2700 பேர் சேவைபுரிந்தனர். தற்போது இடம்பெயர்ந்திருக்கும் இவர்களதும் ஏனைய சிவிலியன் களதும் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கா கவே இந்நிதி நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொதுமுகாமையாளர் மங்கல குணரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் திஸ்ஸ குட்டியாரச்சி உள்ளிட்ட பல அதிகாரிகளும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.