இந்திய மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது

இந்திய நடுவணரசு, இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்திருக்கிறது.

இந்தத் தடையின் விளைவாக, மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை, அவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் கூட அவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இரண்டு நாள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து, இந்த மாநிலங்களில் அதிகபட்ச உஷார்நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *