“தேசிய உணவு வாரம்” இன்று (22 ஆம் திகதி) தொடக்கம் இம் மாதம் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உள்நாட்டு உணவு உற்பத்தியையும், நுகர்வினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் உணவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
“நாம் பயிரிடுவோம் – நாட்டை முன்னேற்றுவோம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்நாட்டு உணவு உற்பத்தி தொடர்பாக தேசிய மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.